தொண்டியில் ஜெலட்டின் குச்சிகளுடன் திரிந்த 2 பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி என்ற இடத்தில் வெடிபொருட்களுடன் சுற்றித் திரிந்த 2 பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.
தொண்டி கடற்கரைப் பகுதியில் ஒரு போலீஸ் குழு ரோந்து சுற்றி வந்தது. அப்போது வீரம்மாள் மற்றும் மீனா ஆகியஇரு பெண்களின் நடமாட்டம் சந்தேகம் தரும் வகையில் இருந்தது.
இதையடுத்து அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, அவர்கள் வைத்திருந்த பையில் 25 ஜெலட்டின் குச்சிகள்இருந்தது தெரிய வந்தது.
இதைக் கண்டதும் திடுக்கிட்ட போலீஸார் அந்த இரண்டு பெண்களையும் கைது செய்தனர். அவர்களிடம்தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications