தமிழக கடல் பகுதியில் இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்
நாகப்பட்டிணம்:
இலங்கை கடற்படை வீரர்களால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள 48 மீனவர்களையும் உடனடியாக மீட்கக் கோரிநாகப்பட்டனம் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து 6-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டனம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 48 மீனவர்களை இலங்கைக் கடற்படை வீரர்கள்பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை உடனடியாக மீட்கக் கோரி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 18 மீனவகிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து 6-வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்கிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகள்,நாட்டுப் படகுகள் கடலுக்குள் போகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொடரும் அட்டூழியம்:
இந் நிலையில் புதுவைப் பகுதியிலுள்ள காரைக்கால் மீனவர்கள் 10 பேரையும் இலங்கைக் கடற்படை வீரர்கள்பிடித்துச் சென்று விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் அங்கும் பரபரப்பு நிலவுகிறது.