கோவில் கட்டுப்பாடு யார் வசம்?: திருவண்ணாமலையில் இன்று பந்த்
திருவண்ணாமலை:
அருணாச்சலேஸ்வரர் கோவிலை மத்திய தொல்பொருள்துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்க முயல்வதைக்கண்டித்து திருவண்ணாமலையில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடந்தது.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்குப் பதிவு செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலை மத்திய தொல்பொருள் துறைதன் வசம் எடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையடுத்து, கோவிலை புணரமைப்பது மற்றும் தேசிய பாரம்பரியச் சின்னமாக மாற்றுவதேமத்தியதொல்பொருள் துறையின் நோக்கம் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜக்மோகன்தெளிவுபடுத்தினார்.
இருப்பினும் தொல்பொருள் துறை திருவண்ணாமலை கோவிலை தன்னகப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்திபோராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் சார்பில் புதன்கிழமை காலை முதல் கடையடைப்பு நடந்து வருகிறது. மாலையில் பொதுக் கூட்டம்நடக்கவுள்ளது. காலையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், பல்துறையினர் அடங்கிய பேரணியும் நடந்தது.
அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் பொருட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு வழக்கு:
இந் நிலையில் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தனது கட்டுப்பாட்டில் எடுப்பதைக் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த உயர் மட்டக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இந்தக் கோவில் மாநிலஅரசின் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோவிலை பராமரிக்க ரூ. 2 கோடி வழங்குவதாக தொல்பொருள் துறை அறிவித்துள்ளது. ஆனால், இதை விட அதிக பணத்தை மாநிலஅரசும், மக்களும் சேர்ந்து திரட்ட முடியும் என்று அரசு கூறியுள்ளது.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications