அறக்கட்டளையில் ஜாதி பிரச்சனை: ராமதாஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
சென்னை:
கோர்ட் உத்தரவை மீறும் வகையில் நடந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர்ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, போட்டி வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன்ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை நிர்வாகத்தை நடத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்துஅந்த நிர்வாகத்தை நடத்துவதற்கு நீதிபதி தங்கமணி தலைமையிலான குழுவை சென்னை உயர்நீதிமன்றம்அமைத்துள்ளது. இந்தக் குழுவில் 8 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் வன்னியர் சமுதாயத்தைச்சேராதவர்கள்.
இந்தக் குழுவின் கூட்டம் அக்டோபர் 4ம் தேதி நடந்தது. அப்போது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள்கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர்.
நீதிபதி தங்கமணி உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வந்தபோது வன்னியர் அல்லாத உறுப்பினர்களைஉள்ளே நுழைய விட மாட்டோம் என வன்னியர் சங்கம் மற்றும் பாமகவைச் சேர்ந்தவர்கள் தடுத்தனர்.
மேலும் நீதிபதியையும் வன்னியரல்லாத குழு உறுப்பினர்களையும் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தனர்.அடிக்கவும் பாய்ந்தனர்.
இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெதீசன் மற்றும் நீதிபதி தினகரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்இந்தப் பிரச்சினை விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள்,
குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்துவது, மிரட்டுவது போன்ற செயல்கள் மூலம் நீதிமன்றத்தையும், நீதியையும்பணிய வைத்துவிட முடியாது என்பதை அவர்கள் (ராமதாஸ் அண்ட் கோ) உணர வேண்டும்.
அறக்கட்டளையின் செயலாளர் இந்தத் தாக்குதல் தொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் போலீஸ் நிலையத்தில் புகார்கொடுக்க வேண்டும்.
புகாரை ஏற்று அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை 4 வாரங்களுக்குள்உயர்நீதிமன்றத்திடம் போலீசார் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications