பிரபாகரனுக்கு 200 ஆண்டு சிறை: இலங்கையில் போராட்டம்
கொழும்பு:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 200 ஆண்டு சிறை தண்டனைவிதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
கடந்த 1996ம் ஆண்டு கொழும்பு நகரில் உள்ள இலங்கை மத்திய வங்கியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாகபிரபாகரனுக்கு 200 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கொழும்பு உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை துவங்கிய கடந்த அக்டோபர்31ம் தேதி இந்தத் தீர்ப்பும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் பேச்சுவார்த்தை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பெரும்பாலானவர்கள் மத்தியில் எழுந்தது. ஆனாலும்இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்ததை விட மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்தது. இலங்கைஅரசியலில் ஈடுபட வெகுவாக ஆர்வம் கொண்டிருப்பதையும் புலிகள் வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் பிரபாகரனுக்கு அளிக்கப்பட்ட 200 ஆண்டுகால சிறைத் தண்டனையை எதிர்த்து தமிழர்கள் வாழும்வடக்கு மற்றும் கிழக்கு இலங்கைப் பகுதிகளில் பெரும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்துவருகின்றன.
யாழ்ப்பாணம், வவுனியா போன்ற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பேரணிப் போராட்டம்நடத்தினர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளும் பேரணியில் கலந்துகொண்டனர்.
பிரபாகரனுக்கு அளிக்கப்பட்டுள்ள 200 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும்,அவருக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் பேரணியில் கலந்து கொண்டவர்கள்கோஷமிட்டனர்.
இலங்கை ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்த கடுமையான போரின் போது ஏற்பட்டது தான் இந்தஅசம்பாவிதம் என்றும் தற்போது இலங்கையில் அமைதி திரும்பி அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் இந்தத் தீர்ப்பு தேவையே இல்லை என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்வலியுறுத்தினர்.
போரின் போது ஏற்படும் சம்பவங்களை எல்லாம் குற்றச் செயல்களாகக் கருதக் கூடாது என்று புலிகளும் சமீபத்தில்நடந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தினர் என்பது நினைவிருக்கலாம்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications