இந்திய கிரிக்கெட் அணியில் 2 தமிழக வீரர்கள் சேர்ப்பு
ராஜ்கோட்:
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராகத் தற்போது நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட 2தமிழக கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அபாரமாகவெற்றி பெற்றது.
இதனால் மிகவும் கடுப்பாகிப் போன இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்றமூன்றாவது ஒருநாள் போட்டியில் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்குடன் சேர்ந்து கொண்டு தூள்கிளப்பினார்.
இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 196 ரன்களைக் குவித்தனர். இது மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்குஎதிரான இந்தியாவின் உலக சாதனையாகும்.
ஆனால் சேவாக்குடன் வி.வி.எஸ். லட்சுமண் வந்து ஆடிக் கொண்டிருந்த போது சில ரசிகர்கள் மேற்கு இந்தியத்தீவுகள் வீரர்களின் மீது பாட்டில்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டதால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ரன் விகித அடிப்படையில் இந்தியா 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாகமேற்கு இந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை எடுத்திருந்தது.
ஒழுங்காக விளையாடி உண்மையான வெற்றியைப் பெற்றுவிட வேண்டும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்கங்குலி. ஆனால் ரசிகர்களின் மோசமான நடவடிக்கை காரணமாக வெறும் பெயரளவுக்கு மற்றுமே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதால் கங்குலி மிகவும் அதிருப்தி அடைந்தார்.
இதற்கிடையே அனில் கும்ப்ளே மற்றும் அஜித்அகர்கர் ஆகிய இருவருக்கும் கல்தா கொடுத்து விட்டார் கங்குலி.
அவர்கள் இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய இந்திய கிரிக்கெட் வாரியம், அவர்களுக்கப்பதிலாக இரண்டு தமிழக வீரர்களை இந்திய அணியில் சேர்த்துள்ளது.
தமிழக அணியில் விளையாடி வரும் வேகப் பந்து வீச்சாளர் எல். பாலாஜியும், ரயில்வே அணிக்காக ஆடிக்கொண்டிருக்கும் சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக்கும் தான் தற்போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இரண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"இந்திய அணியில் இடம் பெறுவது தான் என்னுடைய கனவாக, லட்சியமாக இருந்தது. தற்போது அந்தக் கனவுநனவாகியுள்ளது. கடவுள் எனக்குக் கொடுத்த இந்த வரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வேன். இந்தியஅணியில் தொடர்ந்து நீடிப்பதற்காகக் கடுமையாக உழைப்பேன்" என்று இன்று சென்னை விமான நிலையத்தில்பாலாஜி மகிழ்ச்சியுடன் நிருபர்களிடம் கூறினார்.
இந்திய, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி வரும் 15ம் தேதிஅகமதாபாத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும்.
கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாலும், குஜராத்தில் இன வன்முறையால்பாதிக்கப்பட்ட அகமதாபாத்தில் அடுத்த போட்டி நடைபெறவுள்ளதாலும் அங்கு வரலாறு காணாத பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-->
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications