போலி "டிக்கெட் புக்கிங்" மூலம் பணம் சுருட்டிய போக்குவரத்து ஊழியர்கள்
காரைக்குடி:
போலி "டிக்கெட் புக்கிங்" மூலம் சுமார் ரூ.5 லட்சம் வரை சுருட்டிய தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின்காரைக்குடி பிரிவைச் சேர்ந்த 3 கிளை மேனேஜர்கள் மற்றும் 15 ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்.
காரைக்குடி பிரிவு போக்குவரத்துக் கழகத்தில் சமீப காலமாக அடிக்கடி "டிக்கெட் புக்கிங்" முறை மூலம் வசூலானதொகை அனைத்தும் நஷ்டக் கணக்கையே காட்டி வந்தது.
இதையடுத்து இது குறித்து உயர் அதிகாரிகள் "டிக்கெட் புக்கிங்" முறையை ரகசியமாகக் கண்காணித்தனர்.அப்போது தான் போலி "டிக்கெட் புக்கிங்" மூலம் ஏராளமான பணம் சுருட்டப்படுவது தெரிய வந்தது.
இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மூன்று கிளை மேலாளர்கள் உள்ளிட்ட 18 ஊழியர்கள்சேர்ந்து கொண்டு "கூட்டுக் கொள்ளை" அடித்துள்ளதும் தெரிய வந்தது.
போலி "டிக்கெட் புக்கிங்" மூலம் இது வரை இவர்கள் ரூ.5 லட்சம் வரை சுருட்டியுள்ளனர்.
அடுத்த ஓரிரு நாட்களில் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications