தென் மாவட்டங்களில் இமாம் அலியின் கூட்டாளியை தேடி தீவிர வேட்டை
திருநெல்வேலி:
தீவிரவாதி இமாம் அலியின் கூட்டாளியான ஷாஜகானைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐ.ஜி. ராஜேந்திரன் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டி.எஸ்.பி. அலுவலகத்தைத் திறந்து வைத்தபின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அல்-உம்மா தீவிரவாதியான இமாம் அலியின் நெருங்கியக் கூட்டாளியான ஷாஜகான் தென் மாவட்டங்களில்தான்எங்கோ பதுங்கியிருக்கிறான்.
இவனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படை தென் மாவட்டங்களில் தீவிரமான தேடுதல்வேட்டையில் இறங்கியுள்ளது.
பல இடங்களில் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் ஷாஜகான் பிடிபடுவான் என்றார்ராஜேந்திரன்.
இமாம் அலி உள்ளிட்ட ஐந்து தீவிரவாதிகள் ஒரு சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் உள்ள ஒரு வீட்டில்தமிழகப் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். அப்போது ஷாஜகான் அந்த வீட்டில்இல்லாததால் அவன் மட்டும் தப்பித்து விட்டான்.
-->