கோவை, ராமநாதபுரத்தில் "கொள்ளையோ கொள்ளை"
கோயம்புத்தூர் & ராமநாதபுரம்:
கோயம்புத்தூரில் கோவில் பூசாரியின் வீட்டுக்குள் புகுந்து 100 பவுன் நகை மற்றும் பணம்கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல் ராமநாதபுரம் அருகே பெட்ரோல் பங்க் கேஷியரைவழிமறித்த கொள்ளையர்கள் ரூ.60,000 பணத்தை பறித்துச் சென்றனர்.
கோயம்புத்தூர்-பொன்னையராஜாபுரத்தைச் சேர்ந்த ஒரு கோவில் பூசாரி தன் குடும்பத்தினருடன்நான்கு நாட்கள் சுற்றுலா சென்று விட்டு நேற்று காலை ஊர் திரும்பினார்.
அப்போது வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 100 பவுன் நகைகள்மற்றும் ரூ.50,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் போலீசாரிடம் புகார் செய்தார். கைரேகே நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்களுடன் சென்று அவர் வீட்டில் விசாரணை நடத்திய போலீசார், கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.
வழிப்பறிக் கொள்ளை:
இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் கேஷியரை 3 கொள்ளையர்கள் தாக்கிஅவரிடமிருந்து ரூ.60,000 பணத்தைப் பறித்துச் சென்றனர்.
சி.கே. மங்களம் என்ற ஊரைச் சேர்ந்த அந்த கேஷியர் நேற்று அதிகாலை பணியில் இருந்தபோதுமூன்று பேர் பைக்கில் அங்கு வந்தனர்.
பின்னர் திடீரென்று கேஷியரைத் தாக்கிய அந்தக் கும்பல், பெட்ரோல் பங்க்கின் மேஜை டிராயரில்வைக்கப்பட்டிருந்த ரூ.60,000 பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர்.
தப்பியோடிய மூன்று கொள்ளையர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications