காளிமுத்து மகளுக்கு எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்கியது எப்படி? நீதிமன்றம் கேள்வி
சென்னை:
தமிழறிஞரின் வாரிசு என்ற பெயரில் சபாநாயகர் காளிமுத்துவின் மகளுக்கு எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்கப்பட்டதற்குசென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சில மாதங்கள் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் இருந்தபோது காளிமுத்துவின் மகள் தென்றலுக்குஎம்.பி.பி.எஸ். சீட் தர அவர் பரிந்துரைத்தார். காளிமுத்து தமிழறிஞர் என்று சொல்லி இந்த சீட் கிடைக்க வகைசெய்தார் ஓ.பி.
இதை எதிர்த்து இன்னொரு தமிழறிஞரான பாலஅறிவு என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில்,
நான் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவன். பல ஆங்கிலப் புத்தங்களையும் தமிழில் மொழிபெயர்த்தவன். பல புத்தகங்களை எழுதியவன். பாவேந்தர் விருது வென்றவன். என் மகன் கலைச் செல்வனுக்குதமிழஞரின் வாரிசு என்ற அடிப்படையில் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு விண்ணப்பித்தேன்.
ஆனால், என் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முழு நேர அரசியலில் உள்ள சபாநாயகர் காளிமுத்துவைதமிழறிஞர் என்று சொல்லி அவரது மகள் தென்றலுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வழங்க முதல்வராக இருந்தபன்னீர்செல்வம் உத்தரவிட்டார். காளிமுத்து தமிழுக்கு என்ன செய்தார் என்று புரியவில்லை.
முறைகேடாக அந்த சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. நியாயப்படி என் மகனுக்கே அந்த சீட் தரப்பட்டிருக்க வேண்டும்.எனவே, அந்த சீட்டை ரத்து செய்துவிட்டு என் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தர வேண்டும் என்றுபாலஅறிவு தன் மனுவில் கூறியிருந்தார்.
இதை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி முருகேசன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.விசாரணையின்போது அரசு வழக்கறிஞர் மாசிலாமணிக்கு நீதிபதிகள் டோஸ் விட்டனர். தேர்வுக்கமிட்டிக்கும் நீதிபதிகளிடம் இருந்து கண்டனம் கிடைத்தது.
நீதிபதிகள் கூறியதாவது:
பாலஅறிவு தமிழறிஞர் தானா என்பதையே தேர்வுக் கமிட்டி பார்க்கவில்லை. அவரதுபடைப்புகளையும் கூட பரிசீலனை செய்யவில்லை என்பது தெளிவாகிறது. காளிமுத்து மகள் எப்படிதமிழறிஞர் வாரிசு அடிப்படையில் சீட் பெற்றார்.
எப்படி அந்த சீட்டை ஒதுக்கினீர்கள். இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அடுத்த வாரம்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்வுக் கமிட்டிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications