ராணி மேரி கல்லூரியை இடிக்க உயர் நீதிமன்றம் தடை
சென்னை:
ராணி மேரி கல்லூரியில் உள்ள எந்தக் கட்டடத்தையும் இடிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தங்கள் கல்லூரியை இடிக்கக் கூடாது என்று கடந்தநான்கு நாட்களாக ராணி மேரி கல்லூரி மாணவிகளும் ஆசிரியைகளும் போர்க் கொடி எழுப்பிவருகின்றனர்.
கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக உத்தரவிடப்பட்டபோதிலும் அவர்கள் இரவு பகலாகஉள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ராணி மேரி கல்லூரி இடிக்கப்படுவதை எதிர்த்து தமிழ்நாடு அரசுக் கல்லூரிஆசிரியர்கள் கழகம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது. அம்மனுவில்,
ராணி மேரி கல்லூரியை இடிப்பது பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசியல் சட்டம்15(4)-ஆம் பிரிவுக்கு எதிரானது.
இந்தக் கல்லூரியின் சொத்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமானது. அதை இடிக்கவோ,மாற்றி அமைக்கவோ தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. மேலும் பாரம்பரிய சின்னத்தைஅழிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
தவிர, கல்லூரியை இடிப்பது தொடர்பாக ராணி மேரி கல்லூரியின் ஆசிரியைகளையோ,மாணவிகளையோ அல்லது பல்கலைக்கழகத்தையோ கலந்து ஆலோசிக்காமலேயே தமிழக அரசுஆணை பிறப்பித்துள்ளது. இது சட்ட விரோதமானது என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி கே. கோவிந்தராஜன் வீட்டில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி தன் உத்தரவில்,
வரும் 9ம் தேதி வரை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் உள்ள எந்தக் கட்டடத்தையும் இடிக்கக்கூடாது. அவற்றுக்கு சிறிதளவும் சேதம் விளைவிக்கக் கூடாது. கல்லூரி விடுதியில் தங்கியுள்ளமாணவிகளை வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.
மேலும் இந்த மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சென்னைப்பல்கலைக்கழகம், கல்வித் துறை, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) மற்றும்இந்தியத் தொல்பொருள் துறை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன்.
இம்மனு மீதான அடுத்தகட்ட விசாரணை உயர் நீதிமன்றத்தின் முதல் டிவிஷன் பெஞ்ச்சுக்குஅனுப்பவும் உத்தவிடுகிறேன் என்று நீதிபதி கோவிந்தராஜன் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications