இன்றும் பணியில் சேர்க்கப்படாத 8,063 அரசு ஊழியர்கள்
சென்னை:
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகு, இன்றும் கூட டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் யாரும் பணியில்சேர்க்கப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் வேணுகோபால், 6,072 அரசு ஊழியர்கள்மற்றும் ஆசிரியர்களைத் தவிர மற்ற 8,063 பேரையும் மீண்டும் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகதெரிவித்தார்.
இதையடுத்து சென்னை தலைமைச் செயலகம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள்,பள்ளிகளுக்கு டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று வந்தனர்.
ஆனால் அவர்கள் யாரையும் பணியில் சேர்க்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். நாளை வந்து பார்க்குமாறுஅதிகாரிகள் கூறி விட்டதாக ஏமாற்றத்துடன் திரும்பிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்திடமிருந்து எழுத்துப்பூர்வமான உத்தரவு வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்என்று தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் நேற்று மாலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
ஊழியர்களை மீண்டும் சேர்க்கும் விஷயத்தில் அரசு அவசரம் காட்டவில்லை. தற்போது வாய் மூலமாகவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழுத்துப் பூர்வமான உத்தரவு எங்களது கைக்குகக் கிடைத்த பின்னர்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும் முக்கிய துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ளனர். அவர்கள் வந்த பின்னரே வேலையில் சேர்க்கும்நடவடிக்கையை எடுக்க முடியும் என்றார்.
அதே நேரத்தில் மீதமுள்ள 6,072 பேருக்கு வேலை தரப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீதானவழக்குகளை விசாரிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் குழு விசாரணைக்குப் பின்னரே இவர்கள் குறித்து முடிவு செய்யப்படும்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து இன்று மாலை 4 மணிக்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் கூடிஆலோசனை நடத்துகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications