நாகூர் சந்தனக் கூடு விழா
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
நாகை மாவட்டம் நாகூர் தர்ஹாவில் புகழ்பெற்ற சந்தனக் கூடு விழா சிறப்பாக நடந்தது.
நாகூர் ஆண்டவர் தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி எனப்படும் சந்தனக் கூடு விழா சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் நேற்றிரவு நடந்தது.
வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சந்தனக் கூடு எடுத்து வரப்பட்டது. முக்கியவீதிகள் வழியாக வந்த ஊர்வலம் பின்னர் தர்ஹாவை அடைந்தது.
இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications