மிரட்டல்களை மீறி தா.கியின் கோட்டைக்குள் நுழைந்த கருணாநிதி
மதுரை:
திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுகவினரின் கார்கள், தங்கள் பகுதியை கடந்து போகக் கூடாது என்றுமுன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனின் ஆதரவாளர்கள் கூறியதால், மானாமதுரை அருகே பெரும் பரபரப்புஏற்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மதுரை மற்றும் பரமக்குடியில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டங்களில் கலந்துகொண்டார்.
பரமக்குடிக்கு கருணாநிதி வரக் கூடாது, அப்படியே வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தா.கியின்ஆதரவாளர்களும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு அதிமுகவும்பின்னணியில் நிற்க பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதையடுத்து சிவங்கை மாவட்ட திமுகவினர் கருணாநிதியைச் சந்தித்து நிலைமையை விளக்கினர். போலீசாரின்முழு பாதுகாப்பு கிடைப்பது கடினமே என அச்சம் தெரிவித்த அவர்கள், தாங்கள் முழு பாதுகாப்பு அளிப்பதாகக்கூறினர்.
ஒருவேளை தா.கியின் ஊர் அருகே கருணாநிதியின் காரை போலீசார் தடுத்து, திருப்பி அனுப்பவும்வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தனர்.
என்ன ஆனாலும் சரி, நான் பரமக்குடிக்குச் செல்வேன், திட்டமிட்ட வழியில் தான் செல்வேன், யார் தடுத்தாலும்அதை சந்திப்போம் என்று கூறிவிட்டார் கருணாநிதி. இதனால் பரபரப்பு மேலும் கூடியது.
இதையடுத்து நேற்று மாலை மதுரை வந்த கருணாநிதி, மாலை 5.45 மணியளவில் பரமக்குடிக்கு கிளம்பினார்.அவருடன் ஏராளமான கார்களில் திமுகவினரும் உடன் சென்றனர்.
கார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சென்றபோது, தா.கியின் ஆதரவாளர்களும், மூவேந்தர்முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் ஏராளமான அளவில் திரண்டிருந்தனர்.
அதேபோல திமுகவினரும் ஏராளமாகக் குவியவே டென்சன் பற்றிக் கொண்டது. பெரும் பரபரப்பான சூழ்நிலைநிலவியது. அசம்பாவிதம் நடக்க முழு வாய்ப்பு இருப்பதால் போலீஸார் பெரும் அளவில் குவிக்கப்பட்டனர்.ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதனால் மோதல் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கட்டிக்குளம் என்ற இடத்தில் திமுகவினரின்கார்கள் மீது சிலர் கல் வீசிவிட்டு ஓடிவிட்டனர்.
கருணாநிதியின் வருகையை ஒட்டி தா.கியின் சொந்த ஊரான கொம்புக்கரனேந்தல் மற்றும் முத்தனேந்தல் உள்படமாவட்டத்தின் சென்சிட்டிவான அனைத்து இடங்களிலும் ஆயுதப் படை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications