மும்பையில் 2 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 42 பேர் பலி
மும்பை:
மும்பையில் இன்று பகலில் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 42 பேர் பலியாயினர்.சுமார் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கேட் வே ஆப் இந்தியா மற்றும் மும்பாதேவி அருகே உள்ள தன்ஜி பஜார் தெரு ஆகிய இடங்களில் இந்தக்குண்டுகள் வெடித்தன.
முதல் குண்டு கேட் வே ஆப் இந்தியா அருகே வெடித்தது. இந்த வெடிப்பின் சத்தம் சுமார் 2 கி.மீ. தொலைவுக்குக்கேட்டது. இங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு அம்பாசிடர் காரில் அந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் இன்னொரு குண்டு தன்ஜி பஜார் பகுதியில் வெடித்தது. இங்கும் ஒரு காரில் தான் குண்டுவைக்கப்பட்டிருந்தது. இந்த இரு வெடிப்புகளிலும் 42 பேர் பலியாயினர். 150க்கும் மேற்பட்டவர்கள்படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுகள் வெடிப்பதற்கு முன் பகல் 1.10 மணியளவில் மும்பாதேவி கோவில் அருகே ஒரு தெருவில் உள்ளகட்டடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இது குண்டு இல்லை எனவும், சமையல் கேஸ் வெடிப்பு என்றும் தெரியவந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்புகளையடுத்து மகாராஷ்டிரா முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியஇடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மும்பை நகரம் தயாராகி வரும்நிலையில் இந்த குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன.
குண்டுகள் வெடித்த தகவல் பரவியுடன் அது தொடர்பான புரளிகள் பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும்தொலைபேசி மற்றும் செல்போன் சேவைகள் போலீசாரால் முடக்கப்பட்டுவிட்டன. இதனால் ஒருவரை ஒருவர்தொடர்பு கொள்ள முடியாத மிகக் குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்புகள் நடந்த இடம் குஜராத்திகள் நிறைந்த இடமாகும். இதனால் குஜராத்திலும் மிக பலத்தபாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்புகளை அடுத்து மும்பை பங்கு சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. பல பங்குகளின்விலைகள் மடமடவென சரிந்தன.
குண்டுகள் இரண்டுமே மிக சக்தி வாய்ந்தவையாக இருந்ததால் இவை செட்மேக்ஸ் அல்லது ஆர்.டி.எக்ஸ்.வகையைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உலக அளவில் தீவிரவாதிகள் பயன்படுத்திவரும் மிக பயங்கரமான வகை குண்டுகள் இவை. குண்டுகளின் வகை குறித்து ஆய்வு செய்ய ராணுவத்தின்உதவியை மாநில அரசு நாடியுள்ளது.
கடந்த 6 மாதங்களில் மும்பையில் நடந்துள்ள 9வது குண்டுவெடிப்பு இது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications