பெண் சப் -இன்ஸ்பெக்டர்கள் தேர்வு: எழுத்துத் தேர்வில் 3,515 பேர் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
செப்டம்பர் 03, 2003
பெண் சப் -இன்ஸ்பெக்டர்கள் தேர்வு: எழுத்துத் தேர்வில் 3,515 பேர் பங்கேற்பு
சென்னை:
| தமிழகத்தில் காலியாகவுள்ள 961 பெண் சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. இதில்3,515 பேர் பங்கேற்றனர்.
கடந்த மாதம் நடத்தப்பட்ட உடல் திறன் தேர்வில் 6,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர். |
இவர்களுக்கு சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெறுபவர்களுக்குஅடுத்த மாதம் 1ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
961 காலியிடங்களில் 25 சதவீத இடங்கள், தற்போது பணியில் உள்ள பெண் காவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இடஙகளுக்கு இந்தத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள்நியமிக்கப்படும்.













Click it and Unblock the Notifications