For Daily Alerts
Just In
தமிழக மீனவர்களுக்கு யாழ்பாண மீனவர்கள் எச்சரிக்கை!
ராமேஸ்வரம்:
இலங்கை கடல் எல்லைக்குள் வந்து தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது. மீறினால் கடும் விளைவுகளைசந்திக்க வேண்டி வரும் என்று யாழ்ப்பாணம் பகுதி மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக யாழ்ப்பாணம் குருநகர் மீன் வள கழக செயலாளர் சஹாயராஜ், ராமேஸ்வரம் மீனவர் சங்கத்திற்குஎழுதியுள்ள கடிதத்தில்,
இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் மீன் வலைகள், இலங்கையின் கடல் வளத்தைக் கெடுக்கும் வகையில் உள்ளன.எனவே இந்திய மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் வரக் கூடாது. மீறி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்கநேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து கடற்படையினருக்கும், மாநில அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கூறியுள்ளனர்.
Comments
Story first published: Sunday, September 21, 2003, 5:30 [IST]