கோபாலின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்ட்டுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
கோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரியவா மற்றும் செமா ஆகியோர் கோபாலுக்கு வழங்கப்பட்டஜாமீனை ரத்து செய்தனர்.
இதற்கிடையே, கோபாலுக்கு பவானி நீதிமன்றம் பிறப்பித்த காவல் நீட்டிப்பு உத்தரவை ஈரோடு மாவட்டசெஷன்ஸ் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
போலீஸ் உளவாளி கந்தவேலு என்பவர் கொலை வழக்கில் கோபால் மீது பவானி நீதிமன்றத்தில் வழக்குநிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், கோபாலை சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.இந் நிலையில் கோபாலுக்கு பவானி நீதிமன்றம் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கோபால் தரப்பில் ஈரோடு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதில், சென்னைஉயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டும், பவானி நீதிமன்றம் காவல் நீட்டிப்பு செய்துள்ளது.இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோபால் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கோபாலின் காவல் நீட்டிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications