என்னைத் தாக்க தூண்டியது ஜெயலலிதா தான்: அய்யர்
காரைக்கால்:
என்னைத் தாக்குமாறு விழா மேடையிலேயே அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா சிக்னல் கொடுத்தார் எனகாங்கிரஸ் எம்.பி. மணிசங்கர அய்யர் குற்றம் சாட்டியுள்ளார்.
என் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் நாகை அரசு விழாவில் அநாகரீகமாப பேசியதற்காக ஜெயலலிதா பகிரங்கமன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
| காரைக்கால் அருகே அதிமுகவினரால் தாக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுக்கமணிசங்கர அய்யர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுனர் மாளிகைக்குச் சென்றனர். அவருடன் அகிலஇந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன், மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர்இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் உடன் சென்றனர்.
ஆளுநர் வெளியூர் பயணத்தில் இருப்பதால் ராஜ்பவன் அதிகாரிகளிடம் தனது மனுவை கொடுத்தார் அய்யர். |
என் மீதான தாக்குதலை முதல்வர் ஜெயலலிதா தான் தூண்டினார். அவரைத் தவிர வேறு யார் தூண்டிருக்க முடியும்.அதிமுகவினர் அவர் சொன்னால் தானே மூச்சு கூட விடுகிறார்கள். பாண்டிச்சேரி போலீசார் இது குறித்துவிசாரிக்கிறார்கள். அதற்கு தமிழக போலீஸ் ஒத்துழைப்புத் தந்தால், தாக்கத் தூண்டிய மூத்த தலைவர் யார், தாக்கவந்த வாகனம் யாருடையது என்று தெரியவரும்.
சோனியாவை ஜெயலலிதா விமர்சித்ததை எதிர்த்துத் தான் நான் கல்கத்தாவில் வெளியாகும் ஒரு பத்திரிக்கையில்ஜெயலலிதா பற்றி எழுதினேன். அதை மேடையில் பேசி தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொண்டார்ஜெயலலிதா.
மேடையில் எனக்கு சவால் விட்டுப் பேசினார். அதே மேடையில் என்னைத் தவிர மேலும் இரண்டு பேர் இருந்தனர்.அதில் ஒருவர் ஒரு காலத்தில், ஜானகி அம்மையாரைப் பார்த்தால் கும்பிடத் தோன்றுகிறது. ஜெயலலிதாவைப்பார்த்தால் கூப்பிடத் தோன்றுகிறது என்று பேசியவர். அவரை அதே மேடையில் மறுபடியும் அப்படி பேசச்சொல்வாரா ஜெயலலிதா.
ஜெயலலிதா என்னை அவமானப்படுத்திப் பேசியும் கூட அமைதியாகவே இருந்தேன். அவர் பேசி முடித்த பின்னர்தான் அவரிடம் போய் எனது அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டுக் கிளம்பினேன்.
பின்னர் டிவியில் பார்த்தபோது தான் தெரிந்தது. அந்த அம்மா அப்படிேயே அசந்து போய் இரண்டு நிமிடம்உட்கார்ந்திருக்கிறார். பின்னர் மூத்த அமைச்சர்களைக் கூப்பிட்டு யார், யாருக்கு என்ன வேலை என்று சிக்னல்கொடுத்து இருக்கிறார். அதன்படி என்னை வழிமறுத்துத் தாக்கினார்கள்.
அநாகரீகமாகப் பேசிய ஜெயலலிதா அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க டெல்லி செல்ல இருக்கிறேன் என்றார் மணிசங்கர அய்யர்.
நான் இன்று உயிருடன் இருப்பதற்கு எனது டிரைவர்தான் காரணம், அவர் தான் அந்த கொலை வெறிக் கும்பலிடம்இருந்து தப்பும் வகையில் காரை வேகமாக ஓட்டி என்னைக் காப்பாற்றி விட்டார் என்றார் அய்யர்.
மயிலாடுதுறையில் அய்யரின் எம்.பி. அலுவலகத்தைத் தாக்கிய அதிமுகவினர் அங்கிருந்த மகாத்மா காந்தியின்படத்தைக் கூட கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு













Click it and Unblock the Notifications