செளந்தர்யாவின் மறைவு: தமிழ் திரையுலகினர் இரங்கல்
சென்னை:
நடிகை செளந்தர்யாவின் மறைவுக்கு விஜயகாந்த், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்தெரிவித்துள்ளனர்.
செளந்தர்யா தேர்தல் பிரசாரத்துக்கு போகும் போது, பயணம் செய்த குட்டி விமானம் விபத்துக்குள்ளானது. இதில் செளந்தர்யா,அவருடைய சகோதரர் உள்பட 4 பேர் உடல் கருகி இறந்தனர். செளந்தர்யாவின் மரணம் குறித்து திரையுலகின் பிரபல கலைஞர்கள்பலர் இரங்கல் தெரிவித்தனர்.
விஜயகாந்த்:
நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் கூறியதாவது:
செளந்தர்யா மரணச் செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந் தேன். என்னால் நம்ப முடிய வில்லை. அவர் நேரம்தவறாமல் படப்பிடிப்புக்கு வந்து விடுவார். அவரால் எந்த தொந்தரவும் இருக்காது. பிடிவாதம் இல்லாதவர்.மலிவான சேலையைக் கொடுத்தால் கூட கட்டிக் கொள்வார்.
டைரக்டு செய்ய வேண்டும் என்பது அவருடைய லட்சியமாகும். அது நிறைவேறாமலேயே மரணமடைந்து விட்டார்என்றார்.
சத்யராஜ்:
நடிகர் சத்யராஜ் கூறியதாவது:
செளந்தர்யாவுக்கு அவருடைய அண்ணன் மீது பாசம் அதிகம். அதே போல் அவருடைய அண்ணனும்.கோபிச்செட்டிபாளையத்தில் சேனாதிபதி படப்பிடிப்பின் போது, செளந்தர்யா ஒரு பாறையில் வழுக்கி விழுந்துவிட்டார். அவருடைய அண்ணன் பதறிப் போனார். அப்படி பாசமான அண்ணன் தங்கையைப் பார்த்ததே இல்லை.அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
பார்த்திபன்:
நடிகர் பார்த்திபன் கூறியதாவது:
என் டைரக்ஷனில் இவன் படத்தில் செளந்தர்யா நடித்த போது, இதைவிட நல்ல கதாபாத்திரம் இனிமேல் எனக்குகிடைக்காது. அதனால் இனிமேல் தமிழ் படத்தில் நடிக்க மாட்டேன் என்றார். அவர் சொன்னதன் அர்த்தம் இப்படிஅமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
போன ஏப்ரலில் அவருடைய திருமணத்துக்குப் போய் வந்தேன். இந்த ஏப்ரலில்... செளந்தர்யாவின் நினைவுகள்என்றென்றும் மனதுக்குள் பசுமையாக இருக்கும் என்று கூறினார்.
மீனா:
நடிகை மீனா கூறியதாவது:
செளந்தர்யாவுடன் இவன் உள்பட 4 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறேன். ஒரு கன்னட படப்பிடிப்புக்காக நான்பெங்களூர் போய் இருந்ததேன். நான் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு, செளந்தர்யா ஓட்டலுக்கு வந்து விட்டார்.என்னிடம் பிரியமாக பேசிக் கொண்டிருந்தார். இப்படி திடீர் என்று விபத்தில் இறந்து விடுவார் என்றுஎதிர்பார்க்கவில்லை. என்று கூறினார்.
கவுண்டமணி:
நடிகர் கவுண்டமணி கூறியதாவது:
பொன்னுமணி படத்தில் நடித்தபோது, செளந்தர்யா அறிமுகமானார். என்னை குடும்ப நண்பர் என்று செளந்தர்யாஅடிக்கடி சொல்வார். ரொம்பவும் பாசமான பொண்ணு என்றார்.
கே.எஸ்.ரவிகுமார்:
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் கூறியதாவது:
செளந்தர்யா என் டைரக்ஷனில் படையப்பா படத்தில் நடித்தார். அவருடைய சிரித்த முகம்தான் இப்போதுஞாபகத்துக்கு வருகிறது. அவருக்கு இதுமாதிரி அநியாய சாவு வந்திருக்க்கூடாது என்று கூறினார்.
விபத்தில் மரணமடைந்த செளந்தர்யா உள்பட 4 பேரின் உடல்களும் பெங்களூரில் உள்ள பெளரிங்மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டது.
செளந்தர்யாவை விமானத்தில் வழியனுப்ப வந்திருந்த அவருடைய அண்ணி நிர்மலா, மற்றும் உறவினர்கள்,விமானம் புறப்பட்ட வேகத்திலேயே தரையில் விழுந்து நொறுங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.பிணங்களைப் பார்த்து கதறி அழுதனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்த மோகன் மூர்த்தி என்பவர் கூறும்போது, விமானம் தரையில் விழுந்ததைப் பார்த்து ஓடிச் சென்றுஉள்ளே சிக்கியிருந்தவர்களை வெளியே இழுக்க முயன்றேன். அப்போது விமானம் வெடித்து சிதறியதால் நான் தூக்கிவீசப்பட்டேன் என்றார்.
அதுபோல் இன்னொருவர் கூறும்போது, விமானத்தில் சிக்கியவர்களை வெளியே இழுக்க முயன்றேன். அப்போது பெட்ரோல்விமானப் பாகங்கள் வெடித்துச் சிதறியது என்றார்.
இவர்கள் இருவரும் தீக்காயங்களுடன் பெங்களூர் எலகங்கா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications