அரசு மதுக் கடைகளை எதிர்த்து பாமக மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசே மதுக் கடைகளை நடத்துவதை எதிர்த்து சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநாடு நடந்தது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக் கடைகளை நடத்துவதை பாமக எதிர்த்து வருகிறது. இந் நிலையில் அக்கட்சியின் மகளிர் அணி தலைவி சக்தி கமலம்மாள் தலைமையில் இன்று சென்னையில் மது எதிர்ப்பு மாநாடு நடந்தது.
இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, ன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர்குமரி அனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் முழுமையான மது விலக்கை அமல்படுத்த வேண்டும், அரசு மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகளை மாநாட்டில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர்.
மது எதிர்ப்பு உறுதிமொழியை ராமதாஸ் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications