Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிரட்டல் வழக்கில் சுப. இளவரசன் விடுதலை

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

காவல்துறை அதிகாரியை மிரட்டிய வழக்கில் இருந்து தமிழர் விடுதலை இயக்க தலைவர் சுப.இளவரசன்விடுவிக்கப்பட்டார்.

கடந்த 98ம் வருடம் தஞ்சை அருகே நடந்த வெடிகுண்டு வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சுப.இளவரசன்கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவு நகலை சிறையில் இருந்தசுப.இளவரசனிடம், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் வழங்கிய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது இன்ஸ்பெக்டரை கொலை செய்வேன் என்று மிரட்டியதாக சுப.இளவரசன் மீது கே.கே.நகர் போலீஸார்வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி, இளவரசன் மீதான குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததால்வழக்கில் இருந்து விடுவிப்பதாக உத்தரவிட்டார்.

தீர்ப்புக்காக நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் சுப.இளவரசன் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது வீரப்பனுடன்தொடர்பு உள்ளிட்ட வேறு சில வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+