பிரபல தமிழக கொள்ளையன் மும்பையில் கைது
மும்பை:
தமிழகத்தில் பல்வேறு கொள்ளைகளில் ஈடுட்ட ரெளடி மும்பையில் பிடிபட்டுள்ளான். இதையடுத்து அவன் தமிழகபோலீசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளான்.
மும்பையில் வழக்கம்போல் இரவுச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சிக்கினான் ஆட்டோவில் வந்தராஜ்குமார் என்ற ராஜராஜ சோழன். அவனிடம் விசாரணை நடத்தியபோது தமிழகத்தில் மொத்தம் 300 இடங்களில்கொள்ளை அடித்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து தமிழக போலீசாருக்கு மும்பை போலீசார் தகவல் தந்துள்ளனர்.
பல வெடிகுண்டு வழக்குகளிலும் தொடர்புடைய அவன் 4 முறை சிறையில் இருந்தும் தப்பியுள்ளான்.
இதையடுத்து அவனை தமிழக போலீசாரிடம் ஒப்படைக்க மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்குராஜ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக மும்பை போலீசார் கூறுகின்றனர்.
தன்னை தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தால் என்கெளண்டரில் போட்டுத் தள்ளி விடுவார்கள் என கதறும்ராஜ்குமார், தன்னை மும்பையிலேயே வைத்து விசாரிக்குமாறு கெஞ்சி வருவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications