திருப்பூரில் விநாயகர் சிலை உடைப்பு: பதற்றம்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
திருப்பூரில் இந்து முன்னணியினர் வைத்திருந்த 211 விநாயகர் சிலைகளில் ஒரு சிலை உடைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அப் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை இந்து முன்னணியினர்தாக்கினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
திருப்பூர் கரட்டங்காடு என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை நேற்றிரவு சேதப்படுத்தப்பட்டது.இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் செய்திருக்க வேண்டும் என்று கூறி, அக் கட்சியின் அலுவலகத்தைஇந்து முன்னணியினர் தாக்கினர்.
இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பித் தாக்கினர். இச் சம்பவம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தொண்டர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவுவதால் திருப்பூர் முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications