For Daily Alerts
Just In
கும்பகோணம்: உதவ முன் வரும் காஞ்சி மடம்
காஞ்சிபுரம்:
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் சகோதர, சகோதரிகளின் கல்விக்கு அனைத்துஉதவிகளையும் செய்ய காஞ்சிபுரம் காமகோடி மடம் முன் வந்துள்ளது.
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் செய்தியாளர்களிடம் பேசுகையில், செப்டம்பர் 29ம் தேதி கும்பகோணம் சென்றுஇறந்த குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளேன். அப்போது இந்த உதவியைஅறிவிக்கவுள்ளேன்.
இறந்த குழந்தைகளின் சகோதர, சகோதரிகளுக்கு கல்விக்கான அனைத்து உதவிகளையும் காஞ்சி மடம் வழங்கும்என்றார்.
காஞ்சி மடத்தின் சார்பில், திருப்பதி வெங்கடாசலபதிக்கு வைரம் பதித்த தங்க மகுடம் வழங்கப்படவுள்ளதாகவும்ஜெயேந்திரர் தெரிவித்தார். இதன் மதிப்பு ரூ. 1.5 கோடியாகும்.
Comments
Story first published: Tuesday, September 21, 2004, 5:30 [IST]