வழக்கறிஞர்களுக்கு நேர்மை தேவை: கற்பகவிநாயகம்
கடலூர்:
வழக்கறிஞர்களிடம் நேர்மையும், கடின உழைப்பும் இருக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம்தெரிவித்தார்.
கடலூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மறைந்த கடலூர் வழக்கறிஞர் நடராஜனின் உருவப்படத் திறப்பு விழா நடைபெற்றது. படத்தைதிறந்துவைத்து நீதிபதி கற்பகவிநாயகம் பேசியதாவது:
நான் வழக்கறிஞராக இருந்தபோது மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் வளர்ந்தபின்பு 10 பேரோடு அமர்ந்துதான் சாப்பிடுவேன். அதில்கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடில்லை.
நீதிபதி பதவியைத் தேடி நான் போகவில்லை. நேர்மை, கடின உழைப்பு, இறையருள் என்னை இந்தளவிற்கு உயர்த்தியது. இளம்வழக்கறிஞர்களுக்கு இந்த குணங்கள் வேண்டும்.
அநியாயமான முறையில் பெறும் வெற்றியைவிட, நேர்மையுடன் பெறும் தோல்வி சிறந்தது.
மூத்த வழக்கறிஞர்கள் அவமானப்படுத்துகிறார்களே என்ற அஞ்சக் கூடாது. உழைப்புதான் நமது நண்பன். வழக்கறிஞர்கள் ஜாதிக்குதிரையாக இருக்கவேண்டும். சாதிக்கும் குதிரையாக இருக்கவேண்டும்.
பதவியில் எத்தனைநாள் இருந்தோம் என்பதைவிட, என்ன சாதித்தோம் என்பதுதான் முக்கியம்.
நன்றி உள்ளவர்களாக வழக்கறிஞர்கள் இருக்கவேண்டும். வழக்கை உங்களிடம் கொடுத்தவர்களுக்கு நம்பிக்கை துரோகம்செய்துவிடக்கூடாது.
பணத்தைத்தேடி வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள் என்று கூறினார்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications