For Daily Alerts
Just In
தமிழக, கேரள அதிகாரிகள் பேச்சு
சென்னை:
பரம்பிக்குளம், ஆழியாறு அணை ஒப்பந்தம் குறித்து தமிழக மற்றும் கேரள மாநில அதிகாரிகளுக்கிடையே இன்று சென்னையில்பேச்சுவார்த்தை தொடங்கியது.
பரம்பிக்குளம்-ஆழியாறு தொடர்பாக தமிழக, கேரள மாநிலங்களுக்கிடையே சர்ச்சை இருந்து வருகிறது. இதுவரை பலமுறைபேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.இந் நிலையில், இரு மாநில அதிகாரிகளுக்கிடையே இன்று சென்னையில் பேச்சுவார்த்தை தொடங்கியது.
தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளும், கேரளமாநிலம் சார்பில் தலைமைச் செயலாளர் பாபு ஜேக்கப், மின்துறை செயலாளர் மனோகரன், நீர் ஆதார துறை செயலாளர் மாத்யூஉள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
Comments
Story first published: Saturday, December 18, 2004, 5:30 [IST]