5க்கு முயன்றவர் கைது
உதகமண்டலம்:
4 திருமணங்கள் செய்து நான்கு மனைவிகளையும் பரிதவிக்க விட்டு விட்டு 5வது கல்யாணத்திற்கு ஏற்பாடுகள் செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் உம்மு. இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த முகம்மது நபி என்பவருக்கும் (40) கடந்த 2003ம் ஆண்டு மார்ச்மாதம் கல்யாணம் நடந்தது. திருமணத்தின்போது உம்மு குடும்பத்தினர் ரூ. 40,000 ரொக்கம், 5 பவுன் நகையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
கல்யாணம் ஆன சில மாதங்களில் முகம்மது நபி கேரளாவுக்குச் சென்று விட்டார். இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கூடலூர் வந்த அவர், மீண்டும்குடும்பம் நடத்த வேண்டுமானால் ரூ. 1 லட்சம் வரதட்சணை தர வேண்டும் என்று உம்முவிடம் கூறியுள்ளார்.
ஆனால் அவ்வளவு வரதட்சணை தர முடியாது என்று உம்முவின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். மேலும், முகம்மது நபி குறித்து தேவாலா அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீஸார் முகம்மது நபியைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவர் ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து கொண்டு 3பெண்களையும் பரிதவிக்க விட்டவர் என்பது தெரியவந்தது.
உம்முவிடமிருந்து பிரிந்து கேரளாவில் இருந்தபோது அங்கு ருக்கியா என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துள்ளார் முகம்மது. தற்போது ருக்கியா கர்ப்பமாகஉள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், உம்முவிடமிருந்து பணத்தைப் பறித்த பிறகு கர்நாடக மாநிலத்தில் இன்னொரு பெண்ணையும் கல்யாணம் செய்ய அவர்திட்டமிட்டிருந்தார்.
முகம்மது நபியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications