சென்னை, அந்தமானில் இன்று மீண்டும் நில நடுக்கம்!!
சென்னை:
இந்தோனேஷியாவும் அந்தமானின் கிரேட்டர் நிக்கோபார் பகுதியிலும் இன்று காலை பெரும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்அளவுகோலில் இது 6.5 ஆகப் பதிவானது. இதன் எதிரொலியாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
சென்னையில் இன்று காலை 9.47 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
பல பகுதிகளில் இந்த நில அதிர்வை உணர முடிந்தது. இதையடுத்து மக்கள் வீடுகளையும் கட்டடங்களையும் விட்டு அலறியபடிவெளியேறினர்.
டிசம்பர் 26ம்தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்டசுனாமி அலைத் தாக்குதலுக்குப் பிறகு அந்தமான் தீவுகளில் 100க்கும் மேற்பட்ட ஆப்டர் ஷாக் எனப்படும் நில அதிர்வுகள்ஏற்பட்டுள்ளன.
இதில் இன்று மிக சக்தி வாய்ந்த ஆப்டர் ஷாக் நில அதிர்வு ஏற்பட்டது.
காலை 9.47 மணிக்கு அந்தமானின் கிரேட்டர் நிக்கோபார் தீவுகளில் 6.5 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்துசென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நிலம் அதிர்ந்தது. குறிப்பாக வட சென்னையில் இது அதிக அளவில் உணரப்பட்டது.உயரமான கட்டடங்கள் ஆடின.
இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு அலறியபடி வெளியே ஓடி வந்தனர். மேலும் இந்த நில நடுக்கத்தைத் தொடர்ந்து கடலில்சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் மக்களிடம் பரவியுள்ளது. இதன் காரணமாக கடலோரப் பகுதியினர் வீடுகளைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
பெளர்னமி தினமான இன்று சுனாமி அலைத் தாக்குதல் ஏற்படும் என்று ஏற்கனவே சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் சில தினங்களாக வதந்தி பரவி வந்தது. இந்தப் புரளியை அதிகப்படுத்தும் விதத்தில் இன்று நில அதிர்வுஏற்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.
இருப்பினும் இந்த நில அதிர்வுகளால் சுனாமி அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்று வானிலை ஆராய்ச்சிநிலையத்தின் பூகம்பவியல் பிரிவு தலைவர் ராவ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் 26ம் தேதி சுமத்ராவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தையொட்டி சென்னையில் இரண்டு முறை நில நடுக்கம்ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications