தமிழகத்தில் திடீர் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றிரவு திடீர் மழை பெய்தது. இன்றும் மேக மூட்டமானவானிலை நிலவுகிறது.
இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
கடுமையான வெயில் கொளுத்தி வரும் தமிழகத்தில் நேற்று காலை லேசான தூறல் விழுந்தது. ஆனால்மாலையிலும் இரவிலும் பலத்த மழை பெய்தது.
நேற்றைப் போலவே இன்றும் வானிலை மிக ரம்யமாக உள்ளதால் சென்னைவாசிகள் வெயில் கொடுமையிலிருந்துதப்பியுள்ளனர்.
இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக பெரியகுளத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. பவானியில் 11 செமீ, தூத்துக்குடி, திருச்செந்தூரில்தலா 8 செ.மீ., திருப்பூரில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
மழை இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications