For Daily Alerts
Just In
"மக்கள் ராணுவம்" தொடங்குகிறது அம்பேத்கர் மக்கள் இயக்கம்
ஈரோடு:
தலித் அமைப்பான அம்பேத்கர் மக்கள் இயக்கம், தலித் மக்கள் மீதான அடக்குமுறைகளை கண்காணிப்பதற்காக மக்கள்ராணுவம் என்ற புதிய பிரிவைத் தொடங்குகிறது.
இயக்கத்தின் தலைவரான வெ.பாலசுந்தரம் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தலித் மக்கள் மீதான அடக்குமுறைகள்,கொடுமைகள், சித்திரவதைகள் உள்ளிட்டவை நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
இவற்றைக் கண்காணித்து, தீர்வு காண்பதற்காக மக்கள் ராணுவம் என்ற தனி பிரிவை தொடங்குகிறோம். இந்த மக்கள்ராணுவத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 100 பேர் இடம் பெறுவர்.
தற்காப்புக் கலை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படும். தலித் மக்கள் பாதிக்கப்படும் இடங்களுக்குஇவர்கள் அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும் என்றார் பாலசுந்தரம்.
Story first published: Saturday, March 12, 2005, 5:30 [IST]