டாக்டர் கிருஷ்ணசாமியின் வேனில் அரிவாள்கள் பறிமுதல்
வேலூர்:
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் பாதுகாப்புக்காக வந்த வேனை சோதனை செய்த போலீஸார்,அதிலிருந்து 3 வீச்சரிவாள்களைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று வேலூர் வந்தார். அவருக்குப் பாதுகாப்பாக ஒரு டெம்போ டிராவலர் வேன் உடன் வந்தது. காருக்குமுன்னும் பின்னும் ஏராளமான வாகனங்களும் வந்தன.
காவேரிப்பாக்கம் அருகே உள்ள சோதனைச் சாவடி பகுதியில் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு இந்தக் கார்கள் சென்றன. இவற்றைநிறுத்துமாறு போலீஸார் சைகை காட்டியும் இவை நிற்கவில்லை.
இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். வி.சி.மேட்டூர் என்ற இடத்தில் ரோந்துப் போலீஸார் வாகனங்களை தடுத்துநிறுத்தினர். கிருஷ்ணசாமியின் காரைப் பின் தொடர்ந்து பாதுகாப்புக்காக வந்த வேன் டிரைவரை தடுத்து நிறுத்தி போலீஸார்சோதனையிட்டபோது, அதில் 3 வீச்சரிவாள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார் அதில் இருந்த 7 பேரையும் கைது செய்தனர். வாகனத்தை வேகமாகஓட்டியது, பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது ஆகிய குற்றத்திற்காக வேனில் இருந்த கனகராஜ், சந்திரசேகரன், சரவணன்,கார்மேகம், சந்திரன், பாண்டி, ரவி ஆகியோர் மீது வாலாஜாபேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications