ஜெ. அஜதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக ஜோஷிக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூன் 6ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பாஜகதலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயேந்திரர் கைது தொடர்பாக முரளி மனோகர் ஜோஷி தெரிவித்த சில கருத்துக்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்குஅவதூறு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி ஜோஷி மீது தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.
தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் டி.வி.கணேஷ் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல்செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த 3வது கோர்ட் நீதிபதி பி.ராமலிங்கம், ஜூன் 6ம் தேதிக்குள் ஜோஷி நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினார்.












Click it and Unblock the Notifications