அத்வானி Vs
டெல்லி:
வரும் 21ம் தேதி சென்னையில் தொடங்க இருந்த பாஜவின் மூன்று நாள் செயற்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தக்கூட்டம் செப்டம்பர் மாதத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு அத்வானி பல முறை சென்று சமாதானப் பேச்சு நடத்திப் பார்த்தார். அதேபோல ஆர்எஸ்எஸ் தலைவர்களும் பாஜக தலைமையகத்துக்கு வந்து சென்றனர்.
இப்படியாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சந்தித்து வந்தாலும், ஜின்னாவைப் புகழ்ந்த அத்வானியிடம் இருந்து ஏதாவதுஒரு பதவியையாவது பறிக்க ஆர்எஸ்எஸ் தீவிரம் காட்டி வருகிறது.
ஆனால், பதவி விலக அத்வானி மறுத்து வருகிறார். இந் நிலையில் ஏதாவது ஒரு பதவியை விட்டு அத்வானி விலகுவார் எனமாஜி பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். இந்த குழப்பமான சூழ்நிலையில் வரும் 21ம் தேதி முதல் சென்னை அருகே அக் கட்சியின்தேசிய செயற்குழுக் கூட்டம் கூட இருந்தது.
இக் கூட்டத்தின் செலவுக்காக திருநாவுக்கரசரும் கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணனும் தான் அதிக அளவில் நிதி திரட்டித்தந்துள்ளனர். பெரும் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டம் திட்டமிட்டபடி 21ம் தேதி நடக்குமா என்பதில் சந்தேகம்ஏற்பட்டது.
கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என வெங்கையா நாயுடு போன்றவர்கள் கூறி வந்தனர். ஆனால், முதலில் கட்சியின்கொள்கை முடிவுகளை இறுதி செய்ய வேண்டும் என பங்காரு லட்சுமணன், ஜனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறி வருகின்றனர்.
அத்வானி முதலில் பதவியை விட்டு விலக வேண்டும் என மூத்த தலைவரான மதன்லால் குரானா கூறியுள்ளார்.
இவர்களை மீறி திட்டமிட்டபடி 21ம் தேதி செயற்குழுவைக் கூட்டினால், அதிலும் அத்வானி எதிர்ப்புக் குரல்கள் எழுந்தால்என்ன செய்வது என்ற குழப்பத்தில் பாஜக இருந்தது. இதனால் சென்னை செயற்குழக் கூட்டத்தையே அப்படியே கிடப்பில்போட்டுவிடலாம் என அத்வானி ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.
இந் நிலையில் பாஜக உயர் மட்டக் குழுக் கூட்டம் டெல்லியில் மாஜி பிரதமர் வாஜ்பாய் வீட்டில் நடந்தது. அப்போதுசென்னையில் வரும் 21ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுவதாக இருந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தை ரத்துசெய்வது. அதை செப்டம்பரில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் வி.கே.மல்ஹோத்ரா, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதால், வரும் 21ம் தேதி தொடங்குவதாக இருந்த தேசிய செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.(நாடாளுமன்றக் கூட்டம் நடப்பது பாஜகவுக்கு இப்போது தான் தெரியுமோ?).
செப்டம்பர் 16 முதல் 18ம் தேதி வரை இக்கூட்டம் சென்னையில் நடைபெறும். பாஜக தலைவர் பதவியிலும், மக்களவைஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலும் அத்வானியே தொடர்ந்து நீடிப்பார். அதில் மாற்றம் இல்லை என்றார் மல்ஹோத்ரா.
இதற்கிடையே அத்வானி பதவி விலக வேண்டும் என கோரிய மூத்த பாஜக தலைவர் மதன்லால் குரானா மீது கட்சிக்கட்டுப்பாட்டை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications