37 வருடமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை: புதுவை அரசுக்கு எதிராக வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதுவையில், கடந்த 37 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுவை மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் தொடர்ந்துள்ள பொது நலன்மனுவில், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 1968ம் ஆண்டு தான் இறுதியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.அதன் பிறகு கடந்த 37 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

இதன் காரணமாக அரசின் நலத் திட்ட உதவிகள் மக்களை சரிவர சென்றடையவில்லை. உடனடியாக புதுவை மாநிலத்தில்உள்ளாட்சித் தேர்தலை நடத்த மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர்அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் மற்றும்புதுவை அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+