For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலை?: பிறந்து 12 நாளே ஆன குழந்தை உடல் தோண்டி எடுப்பு

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

தர்மபுரி அருகே புதைக்கப்பட்ட 12 நாளே ஆன குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.

புலியம்பட்டி பகுதியில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதாக புகார்கள் உள்ளன. இந் நிலையில் அமுதா என்பவரின் பெண்குழந்தை பிறந்து 12 நாட்களே ஆன நிலையில் மர்மமான முறையில் இறந்தது.

இதனால் அந்தக் குழந்தையும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அதற்குள் உடலைபெற்றோரும் உறவினர்களும் புதைத்துவிட்டனர்.

குழந்தை கொலை செய்யப்பட்டதாக புகார் வந்ததால் தாய் அமுதா மற்றும் அவரது தந்தை, தாய் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.

மேலும் குழந்தையின் உடலைத் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்துஅக் குழந்தையின் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X