ஏட்டு மகள் கற்பழிப்பு வழக்கில் மகா குழப்பம்
சென்னை:
கட்டாயத் திருமணம் செய்து பல நாட்கள் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் சென்னைதலைமைக் காவலர் தங்கராஜின் மகள் கரோலின் உண்மையில் அவரது சொந்த மகளாஎன்பதில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கரோலினைப் பயன்படுத்தி மேலும் பலரிடம் தங்கராஜ் பணம்பறித்துள்ளதாகவும் போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் தங்கராஜ். பணியிலிருந்துகட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டவர். இவரது மகள் கரோலினை, திரைப்படபைனான்சியர் கோவி.கண்ணன் என்பவர் கடத்திச் சென்று கட்டாயக் கல்யாணம்செய்துகொண்டதாகவும்,தனது மகளை பலமுறை கற்பழித்ததாகவும், இதற்கு சப் இன்ஸ்பெக்டர் முருகேசன்,தலைமைக் காவலர்கள் சந்திரன், உதயகுமார், பெண் போலீஸ் செந்தாமரைச் செல்விஆகியோர் உடந்தை எனவும், அவர்களிடமிருந்து எனது மகளை மீட்டுத் தருமாறுசென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கராஜ் ஹேபியஸ் கார்பஸ் மனு தாககல செயதார்.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கரோலினுக்கு வயது 17தான் என்பதால்அவரை அவரது பெற்ரோருடன் தங்கியிருக்குமாறு உத்தரவிட்டது. மேலும்,இதுகுறிதது விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கும் உத்தரவிட்டது.இந் நிலையில், ரூ. 3 லட்சம் வரை கடன் இருந்ததால் அதை அடைப்பதற்காககோவிகண்ணனுக்கு தங்களது மகள் கரோலினை திருமணம் செய்து தர சம்மதிப்பதாகதங்கராஜும், அவரது மனைவியும் கைப்பட எழுதிக் கொடுத்துள்ளதாககுற்றம்சாட்டப்பட்டுள்ள போலீஸார் தங்களது வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
மைனர் பெண்ணை கல்யாணம் செய்து தருவதாக அவரது பெற்றோரே கடிதம்கொடுத்திருப்பதால் அவர்களையும் போலீஸார் கைது செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இதற்கிடையே, கோவி.கண்ணன் கூறுகையில், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமாபி.ஆர்.ஓ. விஜய்முருகன், செல்வம் ஆகியோர் எனக்கு கரோலினை பெண் பார்த்தனர்.
கரோலினைப் பிடித்துப் போனதால் திருமணத்துக்கு சம்மதித்தேன். அப்போதுஎங்களிடம் நிச்சயதார்த்தம், திருமணம் ஆகியவற்றுக்கு பணம் இல்லை. எனவே ரூ. 3லட்சம் கொடுங்கள் என்று கரோலினின் பெற்றோர் கேட்டனர்.
கரோலின் அழகில் மயங்கிய நானும் பணத்தைக் கொடுத்தேன்.பணத்தை வாஙகிய பின்னர் தங்கராஜும், அவரது மனைவியும் திருமணம் குறித்தபேச்சையே எடுக்காமல் இருந்தனர்.
இதுகுறித்து நான் கேட்டபோது, கரோலின் சினிமாவில் நடிக்கப் போவதாகத்தெரிவித்தனர். இதற்கு நான் ஆட்சேபித்தேன். அவளை நடிக்க விட மாட்டேன்என்றேன்.
அதற்கு அவர்கள் நீ தடுத்தால் உன்னை அசிஙகப்படுத்துவோம் என்று மிரட்டினர்.இதையடுத்து நான் போலீஸில புகார் கொடுததேன். அதன் பினனர் தங்கராஜ் குடும்பம்குறித்து நான் தனிபபட்ட முறையில் விசாரித்தேன்.
அப்போதுதான், அவர்கள ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததும், தொடர்பான செய்திகள்புகரோலினை காட்டி திருமணம் செய்து வைப்பதாகக் கூறி ஜான்சன், பிரபு, ஆனந்தன்ஆகிய நபர்களை ஏமாற்றிப் பணம் பறித்ததும் தெரியவந்தது.
ஏற்கனவே அருண் என்பவருடன கரோலின் வீட்டை விட்டு ஓடியிருக்கிறார் என்றுகூறியுள்ளார் கோவி கண்ணன்.
பெண்ணைக் காட்டி திருமணம் செய்துவைப்பதாக கூறி பலரையும் ஏமாற்றியுள்ளதாகதங்கராஜ் மற்றும் அவரது மனைவி மீது புகார் எழுந்துள்ளதால் இவர்களையும் கைதுசெய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், கரோலின் உண்மையிலேயே தங்கராஜ் தம்பதியினருக்குப் பிறந்தபெண்தானா அல்லது தத்து எடுக்கப்படட பெண்ணா என்ற சந்தேகம் போலீஸாருக்குஏற்பட்டுளளது.
தங்கராஜுக்கு இப்போது 68வயதாகிறது.கரோலினுக்கு 17 வயதுதான் ஆகிறது.இருவருக்கும் இடையே 51 ஆண்டு வயது வித்தியாசம் உளளது. எனவே கரோலின்உண்மையில் தங்கராஜுக்குப் பிறந்த பெண்தானா என்பதை அறிய அவரது சர்வீஸ்ரெக்கார்டை ஆய்வு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, கோவி கண்ணன் கரோலினை கடத்திச் சென்று, ஆண்டிப்பட்டி அருகேஉள்ள தனது சொந்த ஊரான ஜம்புலிபுதூரில் உறவினர் வீட்டில் வைத்து பலமுறைஅனுபவித்தது விசாரணைகளில் நிரூபணமாகியுள்ளது.