அகதிகளுக்கு உதவ பணம் கேட்கும் ஐ.நா
கொழும்பு:இலங்கையில் தங்களது இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு உதவிபெருமளவில் நிதி தேவைப்படுவதாக ஐ.நா. சபையின் மனிதாபிமான ஒத்துழைப்பு குழு கூறியள்ளது.
இதுதொடர்பாக நியூயார்க்கில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் கிழக்குப் பகுதியில் கூடுதலாக 40 ஆயிரம் தமிழர்கள்இடம் பெயர்ந்துள்ளனர். அதிகரித்து வரும் அகதிகளால், அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம்.
சமீப நாட்களாக பல்லாயிரக்கணக்கானோர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர்வெளியேறியுள்ளனர்.
2007ம் ஆண்டுக்கான இலங்கை பொது மனிதாபிமான நடவடிக்கைத் திட்டத்திற்கு 66.2 மில்லியன் டாலர் நிதியை சேகரிக்கத் திட்டமிட்டிருந்தோம்.இதில் இதுவரை 2.7 மில்லியன் டாலர் மட்டுமே சேர்ந்துள்ளது.
இடம் பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு உதவ பெருமளவிலான நிதி அவசரமாக தேவைப்படுகிறது என்று கூறியுள்ளது ஐ.நா.












Click it and Unblock the Notifications