மீனவர்களைக் காக்க சுப.வீ. தலைமையில் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைக் காக்கக் கோரி திராவிட தமிழர் இயக்கப் பேரவை சார்பில் சென்னையில்இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திராவிட தமிழர் இயக்கப் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் இன்று வள்ளுவர் கோட்டம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்நடந்தது.
தமிழக மீனவர்களைக் காக்கக் கோரி நடந்த இந்தப் போராட்டத்தில் பல்வேறு மீனவர் சங்கங்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை கடற்படைக்கு இந்திய அரசு கடும் எச்சரிக்கை விட வேண்டும். தமிழக மீனவர்களைக் காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications