பெண் கடத்தல் அதிகரிப்பு: ராமதாஸ் மருமகள்
காஞ்சிபுரம்:தமிழகத்தில் ஈவ் டீசிங்கும், பெண்களைக் கடத்தலும் அதிகரித்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸின் மருமகளும், மத்திய அமைச்சர் டாக்டர்அன்புமணியின் மனைவியுமான செளம்யா அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக அரசுக்கு எதிராக சமீப காலமாக பாமக போர்க்கொடி உயர்த்தியுள்ளது. திமுக அரசின் ஒவ்வொரு செயலையும் பாமக நிறுவனர் ராமதாஸ்விமர்சித்து வருகிறார்.
இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. மது விலக்கு தொடர்பாக ராமதாஸ் கருணாநிதிக்கு அறிவுரை கூற, அதற்கு முதல்வர் கருணாநிதியும்படு சூடான பதில் கொடுத்துள்ளார்.
இந்தப் பின்னணியில், அன்புமணியின் மனைவி செளம்யா (இவரது தந்தைதான் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி!) தமிழகத்தில் பெண்களின் நிலைமிகவும் மோசமாகி விட்டதாகவும், பெண்களைக் கடத்துவதும், ஈவ் டீசிங் செய்வதும் அதிகரித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பாமக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இந்தக் குற்றாச்சாட்டை அவர் தெரிவித்தார்.கூட்டத்தில் செளம்யா பேசுகையில், பெண்களிடம் கேலி, கிண்டல் செய்யும் ஈவ் டீசிங் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
அதேபோல பெண்களைக் கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் செயலும் அதிகரித்து விட்டது. இவற்றைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
தமிழகப் பெண்கள் தங்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்துப் போராட தயாராக வேண்டும். பள்ளிப் படிப்போடு நின்று விடாமல், மேல் படிப்புபடிக்க பெண்கள் முன்வர வேண்டும். ஏழைகளுக்கும், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கும் உதவ முன்வர வேண்டும் என்றார்செளம்யா.
செளம்யாவின் இந்தக் குற்றச்சாட்டு, திமுக, பாமக பூசலை மேலும் ஊதிப் பெரிதாக்கும் என்று கருதப்படுகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications