ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கு: 23ல் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கரூர்:கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி கொலை வழக்கில் வருகிற 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில், பல்வேறு பரபரப்பு, சலசலப்புகளுக்கு மத்தியில், சில மாதங்களுக்கு முன்பு துப்புதுலங்கியது.

அவரைக் கொலை செய்து புதைத்ததாக சண்முகவேல், குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கரூர் மாவட்ட செஷன்ஸ்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை சாட்சிகள் விசாரணை நடந்தது. விசாரணையின்போது நாங்கள் குற்றவாளிகள்அல்ல, எங்களை குற்றவாளிகளாக மாற்றி, வழக்கை முடிக்க அரசுத் தரப்பில் கட்டாயப்படுத்தி கைது செய்துள்ளனர் என்று குமாரும், சண்முகவேலும்நீதிமன்றத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சாட்சிகள் விசாரணை முடிந்து, இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதமும் முடிவடைந்து விட்டது. இதையடுத்து வருகிற 23ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்என நீதிபதி அய்யப்பன் அறிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+