லைசென்ஸ் இல்லா துப்பாக்கிகள்- சென்னையில்பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் 5 பேர் கைது
சென்னை:உரிமம் இல்லாமல் துப்பாக்கி, குண்டுகள் வைத்திருந்த தனியார் செக்யூரிட்டி நிறுவன மேலாளர் உள்பட 5 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6ம் தேதி திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. 10 பேர் ெகாண்ட கும்பல் அந்த தொழிற்சாலைக்குள் நுழைந்தது.
அவர்களை அங்கிருந்த தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து போலீசாருக்கு தாமதமாகவே தகவல் கிடைத்தது.
இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டபோது, அந்த பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் லைசென்ஸே பெறாமல் துப்பாக்கிகளை பயன்படுத்தி வருவது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் மேலாளர் சிங், ஊழியர்கள் செளகத் அலி, பிஸ்மில்லா அன்சாரி, சகாபுதீன் கான், ரஷீத் ஆலம் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications