Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கைக்கு கடத்த முயற்சி: பீடி பண்டல்கள்படகு பறிமுதல் - 6 பேர் கைது!

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பீடி பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் ஆனது. இதுதொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கியூ பிரிவு போலீஸார் உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம், காரான், தாமரைக்குளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தாமரைக்குளம் கிராமத்தில் சந்தேகப்படும்படியான ஒரு வேன் வலங்காபுரி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. போலீஸார் மாறு வேடத்தில் அந்த வேனைப் பின்தொடர்ந்தனர்.

வலங்காபுரி வந்ததும் அந்த வேனிலிருந்து பீடிக் கட்டுக்கள் இறக்கப்பட்டன. பின்னர் அங்கு தயாராக இருந்த பைபர் கிளாஸ் படகில் அந்த பீடி பொட்டலக் கட்டுக்கள் ஏற்றப்பட்டன. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர்.

அந்த பீடி பார்சல்களை இலங்கைக்கு கடத்தவிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து செல்லத்துரை, சேவியர், ரோசாக், காந்தி, பாஸ்கரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர் இவர்களில் சேவியரும், ரோசாக்கும் இலங்கையைச் சேர்ந்த படகோட்டிகள்.

பின்னர் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜியா உல் ஹக் என்பவரும் கைதானார். மொத்தம் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பீடி பொட்டலங்கள், படகு, பீடி ஏற்றி வந்த வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+