மின் வெட்டே இல்லையாம்.. சொல்கிறார் ஆற்காடு!
Subscribe to Oneindia Tamil
மதுரை:மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த மாணிக்கம்பட்டியில் துணை மின் நிலையத்தை மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
இந்தியாவில் 2 மாநிலங்களில் தான் மின் தடை இல்லாத நிலை உள்ளது. ஒன்று தமிழ்நாடு மற்றென்று பஞ்சாப்.
மேலும் மின்சார இழப்பை 18 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. வீடுகளுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த அடுத்த நாளே மின் இணைப்பு கொடுக்கப்படும். இதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
விழாவில் மதுரை கலெக்டர் ஜவகர், திண்டுக்கல் எம்பி சித்தன் ஆகியோர் கலந்து கொண்டார்.
ஆற்காடு பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனால், தமிழகத்தில் மின் வினியோகத்தில் உண்மை நிலை என்ன என்பது பொது மக்களுக்குத் தெரியும்.












Click it and Unblock the Notifications