ஜெயலலிதாவுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ்
சென்னை:
முதல்வர் கருணாநிதி ம
ற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் மீது அவதூறு புகார் கூறிய ஜெயலலிதாவுக்கு திமுக வழக்கறிஞர் ஆலந்தூர் பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நோட்டீசில் அவர் கூறியிருப்பதாவது,
என்னுடைய கட்சிக்காரர்களாகிய முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ள விஷயம் தொடர்பாக இந்த நோட்டீசை தங்களுக்கு அனுப்புகிறேன்.
கடந்த 17ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த நீங்கள் எங்களது கட்சிக்காரர்கள் இருவர் மீதும் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறீர்கள். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டதாக சில வார்த்தைகளை குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மைக்கு புறம்பான தகவலாகும். உங்கள் வீட்டுக்குள் நுழைந்தவர் உங்கள் கட்சியான அதிமுகவின் அனுதாபி என்று நம்பப்படுகிறது. அவருக்கும் எனது கட்சிக்காரர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு தொண்டாற்றுவதை திசை திருப்பும் வகையில் இப்படி புகார் கூறி இருக்கிறீர்கள்.
நீங்கள் கூறிய புகாருக்காக இந்த நோட்டீசை கண்ட இரு தினங்களுக்குள் (48 மணி நேரத்திற்குள்) வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் மீது சிவில், கிரிமினல் சட்டப்படி அவதூறு வழக்கு தொடரப்படும் என்று நோட்டீசில் கூறியுள்ளார் பாரதி.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவை வசமாக சிக்க வைத்தவர் பாரதி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications