For Daily Alerts
Just In
மருத்துவமனையில் அய்யரை சந்தித்த கருணாநிதி
சென்னை:
மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யரை முதல்வர் கருணாநிதி இன்று நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
நாகபட்டணத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மணிசங்கர் அய்யருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அங்கு ஒரு மருத்துவமனையில் முதலுதவி பெற்றார்.
பின்பு திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது நிலைமை மோசமானதால் உடனடியாக விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவரது உடல் நிலை சீரானது.
தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள அய்யரை முதல்வர் கருணாநிதி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 21:19 [IST]