தமிழக மீனவர்களை சுட்டு விரட்டிய இலங்கை கடற்படை
நாகப்பட்டனம்:
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்.
நாகை மாவட்டம் விழுந்தமாவடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கரிகாலன், முருகேன், சிலம்பு என்கிற சிலம்பரசன், சசிபாலன் மீன் பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரை அருகே உள்ள கடல் பகுதியில் இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதையடுத்து நான்கு பேரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர்.
பின்னர் அவர்களது மீன் பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த மீன் உள்ளிட்டவற்றை கடலில் வீசி விட்டு இலங்கை கடற்படையினர் போய் விட்டனர்.
கடலில் நீந்தியபடி தத்தளித்த நான்கு மீனவர்களையும், அப்பகுதி வழியாக வந்த மற்ற மீனவர்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் நாகை மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications