மனைவி, மகளை கொன்று வியாபாரி தற்கொலை
ஆலங்குளம்:
நெல்லை அருகே வியாபாரி ஒருவர் தன் மனைவி, மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம் அருகேயுள்ள அம்பலவாசகர் தெருவை சேர்ந்த சிவலிங்கம் நெல் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி வசந்தா. இவர்களது மகள் இசக்கியம்மாள்.
சிவலிங்கத்தின் வீடு நேற்று மதியம் வரை திறக்கப்படாமல் பூட்டியே கிடந்ததால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களும், பஞ்சாயத்துத் தலைவர் அண்ணாதுரையும் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது வசந்தா, இசக்கியம்மாள் ஆகிய இருவரும் கத்திகுத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். சிவலிங்கம் தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார்.
மனைவியையும், குழந்தைகளையும் கத்தியால் குத்தி கொன்றுவிட்டு சிவலிங்கம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
சிவலிங்கத்தின் மூத்த மகள் முத்துலட்சுமி திருமணமாகி பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். மகன் சுரேஷ் சென்னையில் ஹோட்டலில் வேலை பார்க்கிறார்.