For Daily Alerts
Just In
தாஜ்மஹாலில் நிலவுத் திருவிழா
யமுனை நதிக் கரையின் அழகுச் சின்னம் தாஜ்மஹாலில் அக்டோபர் 24ம் தேதி முதல் 'நிலா மகாத்சோவம்' நடைபெறவுள்ளது.
சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் நோக்கில் இந்த நிலா மகாத்சோவ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை ஆக்ரா மாவட்ட நிர்வாகம், பல்வேறு நிறுவனங்கள் இணைந்து நடத்துவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் முகேஷ் மேஷ்ராம் கூறியுள்ளார்.
இந்த வைபவத்தின் ஒரு பகுதியாக, தொழில் கண்காட்சி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் புகழ் பெற்ற பாடகர்கள், நடனக் கலைஞர்கள் பங்கற்கும் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
5 நாட்களுக்கு இந்த நிலவுத் திருவிழா நடைபெற இருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 21:19 [IST]