தமிழகத்தில் இடியுடன் மழை பெய்யலாம்!
சென்னை:
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யலாம் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குமரி மாவட்டம் மயிலாடி என்ற இடத்தில் 11 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது.
இதேபோல தமிழகத்தின் உட்புறப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. சென்னை நகரில் நேற்று பலத்த இடியும், மின்னலுமாக இருந்தது. இரவில் லேசான மழை காணப்பட்டது.
இந்த நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்ேசரியின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
தென் மேற்கு பருவமழைக் காலம் முடிவடையவுள்ள நிலையில், விரைவில் வட கிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறியே இந்த மழை என்று கூறப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications